search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறிப்பு"

    • மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
    • கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளி ஊராட்சி துலுக்கம் பாளைத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (38). இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கருப்புசாமி நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். தொடர்ந்து அவர் நான் உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும் உங்கள் கடையில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தகவல் வந்ததால் உங்கள் கடையை சோதனை செய்ய வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து அந்த வாலிர் உங்கள் மீது வழக்கு போடாமலும், மளிகை கடையை சீல் வைக்காமலும் இருக்க பணம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

    இதனால் பயந்து போன கருப்புசாமி கடையில் இருந்த பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டுங்கள் என கருப்புசாமி கூறியுள்ளார். அதையெல்லாம் காட்ட முடியாது எனக்கூறி அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கருப்புசாமி அந்த பகுதியில் இருந்தவர்களிடம் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். அப்போது கருப்புசாமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர் மோசடி நபர் என தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து கருப்புசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது உணவு பாதுகாப்பு அலுவலராக நடித்து பணத்தை பறித்து சென்றவர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு வீதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மகன் நவீன்குமார் (29) என தெரிய வந்தது. பின்னர் நவீன்குமாரை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • கும்பலுக்கு ஹரிபிரசாத் தலைவனாக இருந்துள்ளான்.
    • மோசடி கும்பல் பெங்களூரு, கோவை, மும்பை போன்ற பகுதிகளில் தங்கி இருந்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 43 வயதான நபர், ஆயுர்வேத மசாஜ் பெற விரும்பினார். இதற்காக இவர் ஆன்லைனில் வெளியான பல்வேறு தகவல்களை தேடி பார்த்தார்.

    பின்னர் ஒரு செயலியில் வெளியான ஆயுர்வேத மசாஜ் குறித்த விவரங்களை பார்த்து தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அதில் இளம்பெண்களின் ஆபாச படங்களை காட்டி பல்வேறு விபரங்களை கேட்ட நபர், 8.25 லட்சம் ரூபாய் பெற்றார்.

    ஆனால் ஆயுர்வேத மசாஜ் தரவில்லை. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலிபரிடம் மோசடியில் ஈடுபட்டது, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சேரன் நகரை சேர்ந்த ஹரிபிரசாத்(31) மற்றும் அவரது கூட்டாளிகளான பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மகேந்திரன், தேவம்பட்டி சக்திவேல்(26), ஈரோட்டை சேர்ந்த சரவணமூர்த்தி(23), திருப்பூரை சேர்ந்த அருண்குமார்(24), மற்றொரு சக்திவேல்(29), ஜெயபாரதி(22), மகேந்திரன்(30), கோகுல்(31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    அப்போது அந்த கும்பல் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    இந்த கும்பலுக்கு ஹரிபிரசாத் தலைவனாக இருந்துள்ளான். அவனது தலைமையில் தான் இவர்கள் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் விரைவில் பணம் குவிக்க வேண்டும் என்ற ஆசையும், சொகுசாக வாழவும் ஆசைப்பட்டுள்ளனர்.

    இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் லொக்கண்டா ஆப்பை பார்த்துள்ளனர்.

    அதில் கவர்ச்சி படங்கள் இருப்பதையும், அதனை பலர் பார்ப்பதையும் அறிந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து இதனை வைத்து நாம் பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தனர்.

    அதன்படி லொக்கண்டா அப்பில் வரும் தகவல்கள் மற்றும் விபரங்கள் கேட்பவர்களின் தகவல்களை சேகரித்து கொண்டனர்.

    பின்னர் சேகரித்த தகவல்களை வைத்து, அந்த நபரை செல்போனில் இவர்கள் தொடர்பு கொள்வார்கள்.

    அப்போது அந்த நபரிடம் மசாஜ், கால் கேர்ஸ், விபசாரம் என பல்வேறு தேவைகளுக்கு பெண்களை அனுப்புவதாகவும், குறிப்பிட்ட ஓட்டல், ரிசார்ட்டில் சர்வீஸ் செய்து தரப்படும்.

    உங்கள் பகுதியில் உள்ள ஓட்டல், ரிசார்ட் என தேவையான இடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

    அங்கு குறிப்பிட்ட பெண்கள் வருவார்கள் என தகவல்கள் வெளியிடுவார்கள்.

    அழகான பெண்களின் ஆபாச போட்டோ அவர்களின் விவரங்களை குறிப்பிடுகிறார்கள்.

    மேலும் போட்டோக்களையும் அந்த நபர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனை பார்த்ததும் சபலம் ஏற்பட்டு அவர்களும், மோசடி கும்பல் தெரிவிக்கும் பகுதிக்கு செல்கின்றனர்.

    அங்கு சென்ற பின்னர் தான் அங்கு யாரும் இல்லை என்பதும், தன்னிடம் மோசடி நடந்ததும் தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

    ஆனால் இது வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதி யாரும் புகார் அளிப்பதில்லை. இதனை இந்த கும்பல் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    மேலும் இந்த மோசடி கும்பல் பெங்களூரு, கோவை, மும்பை போன்ற பகுதிகளில் தங்கி இருந்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதும், இதற்காக இவர்கள் புதிய சிம்கார்டுகள், வங்கி கணக்குகள் தொடங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

    குறிப்பிட்ட ஆப்பில், பல்வேறு தேவைகளுக்கு பெண்களை அனுப்புவதாக கூறி தகவல்களை வெளியிடுகிறார்கள். அத்துடன் அவர்களின் புகைப்படங்களையும் அனுப்புகிறார்கள். பெண்ணை பார்த்து அழகில் மயங்கும் வாலிபர்கள், அவர்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விடுகின்றனர். பின்னர் ஓட்டல், ரிசார்ட்டுக்கு சென்று பார்த்த பின்னர் தான் அவர்களுக்கு இது மோசடி என்பது தெரியவருகிறது. பெண் ஆசையில் பணத்தை இழந்தவர்கள் அதை வெளியில் சொல்ல தயங்கி கண்ணீர் வடிக்கிறார்கள். அவமானம் கருதி புகார் தராமல் இருக்கிறார்கள். இதனை இவர்களை போன்ற கும்பல் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி மோசடி செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கைகோலம்பாளையம் அருகே வழிமறித்து பணம் பறிப்பு
    • கோவில்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இளையபாரதி (வயது 23). தனியார் நிறுவன ஊழியர்.

    சம்பவத்தன்று இவர் கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கைகோலம்பாளையம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் இளையபாரதியை தடுந்து நிறுத்தினர்.

    பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளையபாரதியை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.21,900 ரொக்க பணம், 2 பவுன் செயின், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கு இருந்த தப்பிச் சென்றனர். இது குறித்து இளையபாரதி கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் மற்றும் செல்போனை பறித்தது சரவணம்பட்டி, காளப்பட்டி, குனியமுத்தூரை சேர்ந்த 17, 16, 18 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புகளூர் அருகேஒப்பந்ததாரரை கடத்தி பணம் பறித்த தூத்துக்குடி வாலிபர்கள்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 48 ). இவர் புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலை மற்றும் தமிழ்நாடு முழுவதும் சிவில் ஒப்பந்த காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.

    செல்வக்குமாரிடம் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் டி.என்.பி.எல். காகித ஆலை நிறுவ னத்தில் நிவின் ஸ்டார் செல்வகுமாரின் சிவில் காண்ட்ராக்டில் ஒப்பந்தம் செய்து பணியை முடித்து விட்டு அதற்கு உண்டான தொகையை பெற்றுக் கொண்டனர். பின்னர் நிவின் ஸ்டார் மேலும் பணம் வேண்டும் என்று செல்வகுமாரிடம் கூறி யுள்ளனர்.

    செல்வகுமார் பாலத்து றையில் உள்ள தனது பெயிண்ட் கடையை இரவு மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கூலக்கவுண்டனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வக்குமாரை தடுத்து நிறுத்தி கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி அவரை காரில் கடத்திச் சென்று தகாத வார்த்தை களால் பேசி தாக்கியுள்ளனர்.

    பின்னர் கொலை மிரட்டல் விடுத்து செல்வகு மாரிடம் இருந்து அவர் வைத்திருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து செல்வகுமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் தூத்துக்கு டியைச் சேர்ந்த நிவின் ஸ்டார், விஜய், கவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • 2 பெண்கள் தப்பி ஓட்டம்
    • ஆட்டோவில் ஏறி பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டம்மாள் (வயது 60). இவர் மருந்து வாங்க அணைக்கட்டு பகுதிக்கு ஆட்டோவில் வந்தார்.

    அப்போது இடையில் 2 பெண்கள் ஆட்டோவில் ஏறி மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

    அணைக்கட்டு பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கியதும் 2 பெண்கள் சேட்டம்மாளிடம் குறைந்த பணத்தில் அதிக தீபாவளி பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறினர். இதற்கு சேட்டம்மாள் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு கில்லாடி பெண்களோ காது, மூக்கில் உள்ள நகையை அடமானம் வைத்து கொடு என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து சேட்டம்மாள் அணைக்கட்டு பகுதியில் உள்ள அடகு கடையில் தனது நகையை கழற்றி அடமானம் வைத்தார். அதில் வந்த ரூ.6 ஆயிரத்தை சேட்டம்மாள் தீபாவளி பரிசு பொருட்கள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறிய பெண்களிடம் கொடுத்தார்.

    தீபாவளி பரிசு பொருட்களை எடுத்து வருவதாகவும், அதுவரை பஸ் நிலையத்தில் இருக்கும்படி சொல்லி விட்டு அங்கிருந்து மாயமாகி விட்டனர்.

    தீபாவளி பரிசு பொருட்கள் எடுத்து வருவார்கள் என்று நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சேட்டம்மாள் காத்திருந்தார். ஆனால் பலே கில்லாடி பெண்கள் வரவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேட்டம்மாள் இது குறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சியடைந்த அந்த பெண் யூ-டியூப்பர், 14 ஆயிரம் ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பியிருக்கிறார்.
    • வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    ஹனி டிராப் என்பது ஒருவரை கவர்ந்து மயக்கி அவரின் ரகசிய தகவல்களை அறிந்துகொள்வதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை வழக்கு விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் நவீன காலத்தில் இந்த முறையை சில மோசடி ஆசாமிகள் கடைபிடித்தது பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதாவது, யாராவது ஒரு நபரின் பலவீனத்தை தெரிந்துகொண்டு, அதன்மூலம் அவரை ஆசை வார்த்தைகள் மூலம் மயக்கி, அவரிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை அபகரித்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகளவில் நடக்கிறது.

    இந்நிலையில் கேரளாவில் அதேபோன்று ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான யூ-டியூப்பரிடமே ஒரு கும்பல் ஹனி டிராப் முறையில் கார் மற்றும் பணத்தை பறித்த சம்பவம் நடந்துள்ளது.

    அந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண் யூ-டியூப்பர் ஒருவர் குடும்ப ஆலோசகராக இருக்கிறார். அது தொடர்பான வீடியோக்களை யூ-டியூப்களில் வெளியிட்டு வந்திருக்கிறார். அதில் தனது தொடர்பு எண்ணையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யூ-டியூப்பரின் செல்போனுக்கு இடுக்கி பகுதியை சேர்ந்த அக்க்ஷயா என்பவர் போன் செய்துள்ளார். அப்போது தனக்கு கவுன்சிலிங் தேவை என்று பெண் யூ-டியூப்பரிடம் தெரிவித்து கூத்தாட்டுக்குளத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி பெண் யூ-டியூப்பரும் அந்த அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு அங்க அக்ஷயா மட்டுமின்றி, இடுக்கி சந்தன்பாறையை சேர்ந்த அதிரா(28) என்ற இளம்பெண்ணும், வட்டப்பாறை பகுதியை சேர்ந்த அபிலாஷ்(28), கொல்லம் கைதோடு பகுதியை சேர்ந்த அல்அமீன்(23) என்ற 2 வாலிபர்களும் இருந்துள்ளனர்.

    அவர்கள் பெண் யூ-டியூப்பருக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துள்ளனர். அதனை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அதனை பயன்படுத்தி பெண் யூ-டியூப்பரை அவர்கள் நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளனர். பின்பு சிறிதுநேரம் கழித்து பெண் யூ-டியூப்பர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

    அப்போது அவர்கள் 4 பேரும் தங்களிடம் இருந்த நிர்வாண படத்தை காண்பித்து பணம் தருமாறும், இல்லையென்றால் அந்த நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் யூ-டியூப்பர், 14 ஆயிரம் ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பியிருக்கிறார்.

    அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், பெண் யூ-டியூப்பரின் ரூ2.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறித்துக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் யு-டியூப்பர், கூத்தாட்டுக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    பெண் யூ-டியூப்பரிடம் பணம் மற்றும் காரை பறித்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்களது இருப்பிடத்தை செல்போன் டவர் மூலம் கண்டறிந்த போலீசார், அங்கு சென்று அக்ஷயா, அதிரா, அபிலாஷ், அல்அமீன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

    அவர்கள் இதுபோன்று வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • குமார் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் குமார்(34). இவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது குமாரி டம் திருநங்கை ஒருவர் ஆசை வார்த்தை கூறி ஒரு ஆட்டோவில் 5 ரோடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே குமாரிடம் இருந்த செல்போனிலிருந்து வேறொரு செல்போன் எண்ணிற்கு கூகுள்பே மூலம் ரூ.5 ஆயிரத்தை அனுப்ப வைத்துள்ளார்.

    பின்னர் குமாரிடம் தகராறு செய்து ஆட்டோவில் இருந்து குமாரை கீழே இறக்கி விட்டு திருநங்கை தப்பி சென்று விட்டார். இது குறித்து குமார் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் தாஜ் கிருஷ்ணா ஓட்டல் சந்திப்பு அருகே சென்றபோது போலீஸ் சீருடையில் பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்தனர்.
    • பணப்பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.15 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.5 லட்சம் காணாமல் போனது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி போலீஸ்காரர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜவுளிக்கடை ஊழியர்களிடம் வழிப்பறி செய்துள்ளார்.

    ஐதராபாத், பஷீர் பார்க்கை சேர்ந்தவர் பிரதீப் ஷர்மா (வயது 30). இவர் பேகம் பஜார், மெஹதி பட்டினத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அக்சய் என்பவர் ஜவுளிக்கடைகளில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரூ.20 லட்சத்துடன் பிரதீப் சர்மா, அக்சய், பிரதீப் சர்மாவின் டிரைவர் சங்கர் ஆகியோர் காரில் பஞ்ச குட்டாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்வதற்காக ரூ.20 லட்சத்துடன் புறப்பட்டு சென்றனர்.

    கார் தாஜ் கிருஷ்ணா ஓட்டல் சந்திப்பு அருகே சென்றபோது போலீஸ் சீருடையில் பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்தனர்.

    அதேபோல் போலீஸ் என எழுதப்பட்ட கார் அங்கு வந்து நின்றது. அப்போது போலீஸ் சீருடையில் வந்தவர்கள் தேர்தலையொட்டி வாகன சோதனை நடத்துகிறோம் என தெரிவித்தனர்.

    காரை சோதனை செய்தனர். காரில் இருந்த பையில் ரூ.20 லட்சம் இருந்ததால் கருப்பு பணமா என விளக்கம் கேட்டு விட்டு கைராபாத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பிரதீப் சர்மா உட்பட 3 பேரையும் அழைத்துச் சென்றனர்.

    பின்னர் பணப்பையை பிரதீப் சர்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றனர். பணப்பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.15 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.5 லட்சம் காணாமல் போனது. இதுகுறித்து பிரதீப் சர்மா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் போலீஸ் சீருடைகள் வந்து பணத்தை பறித்து சென்றதாக சந்தேகம் அடைந்தனர்.

    மேலும் போலீசார் பணம் வழிப்பறி நடந்த இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது வழிப்பறிக்கு பயன்படுத்தியது கமிஷனர் அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டரின் கார் என தெரிய வந்தது. வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஆயுதப்படையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் என கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்தனர்.

    மேலும் அவருடன் வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரஞ்சித்குமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் மகேந்திரா சிட்டி பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் பஸ் மூலம் சிங்கப்பெருமாள் கோவிலில் வந்து இறங்கினார். பின்னர் தங்கி இருக்கும் இடத்திற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ரஞ்சித் குமாரை வழிமறித்து கத்தியால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ரஞ்சித்குமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சண்முக சுந்தரத்ைத கத்தியை காட்டி மிரட்டி ரூ.900-ஐ பறித்து சென்றார்.
    • முகமது மீரானை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் சாலையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பல்லடத்தை அடுத்த அருள்புரம்- திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் நேற்று காலை சாலையில் நடந்து சொல்லும்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சண்முக சுந்தரத்ைத கத்தியை காட்டி மிரட்டி ரூ.900-ஐ பறித்து சென்றார்.

    இது குறித்து பல்லடம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த அபுதாகீர் மகன் முகமது மீரான்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது மீரானை போலீசார் கைது செய்து, பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பூக்கடை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    ராயபுரம்:

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் துலால் தத்தா (62). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் தனியாக சென்னை வந்தார்.

    பின்னர் அவர் வேலூர் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மெட்ரோ ரெயிலில் ஏறியவர் தவறுதலாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கினார்.

    இதனால் எப்படி செல்வது என்று தெரியாமல் நின்ற துலால் தத்தா அங்கிருந்த ஆட்டோ ஒன்றை சவாரிக்கு அழைத்தார். அப்போது ஆட்டோ டிரைவர் வேலூர் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் மேலும் 3 வாலிபர்கள் ஆட்டோவில் ஏறினர். அவர்கள் முதியவர் துலால் தத்தாவை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.4500 பணத்தை பறித்துக் கொண்டு முதியவரை பூந்தமல்லி பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்று விட்ட னர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த துலால் தத்தா வேலூரில் உள்ள மருமகனுக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விசாரணையில் முதியவரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டது ஆட்டோ டிரைவர்களான சூளை, கே.பி. பார்க் பகுதியை சேர்ந்த பெரிய சாமி, புளியந்தோப்பு நேரு நகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிந்தது. அவர்களை பூக்கடை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.

    • கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவர்கள் பணம் பறித்தனர்
    • வடவள்ளி போலீஸ்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள யமுனா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் நேற்று இரவு பணி முடிந்து சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து பிரபாகரன் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

    விசாரணையில் 3 வாலிபர்களில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×